Mar 28, 2008

புரட்சி வெடிக்கட்டும்

'உனது கைத்தடியைச் சுழற்ற உனக்கு முழு உரிமை உள்ளது ஆனால் அந்த உரிமை அடுத்தவரின் மூக்கு நுனி வரை மட்டுமே' என்ற ஒரு சொல் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு.
வீதியில் நடந்தபடி ஒருவர் சுழற்றிய கைத்தடி அருகே சென்றவரின் மூக்கு நுனியைப் பதம் பார்த்து விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதி மன்றத்தில, கைத்தடியைச் சுழற்றியவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரனைக்கு வந்தது.. "எனது கைத்தடியை நான் சுழற்ற எனக்கு உரிமையில்லையா? என்று சுழற்றியவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு தான் இப்படி ஒரு சொல் வழக்கு உருவான கதை.
இப்படித்தான் இப்போது 'கருத்துச் சுதந்திரம்' என்னும் ஒருவார்த்தை பாடாய் படுகிறது. ஆம் டென்மார்க்கில் ஒரு பத்திரிக்கை நபிகள் குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டு கொள்ளிக்கட்டையால் தன் அரிப்பைச் சொரிந்து கொண்டுள்ளது.
அப்பத்திரிக்கை பிரச்சினையின் ஆழம் தெரியாமல் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருக்கலாம். இதற்காக எழந்த எதிர்ப்புகளைக் கண்ட பிறகாவது தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.(நன்றாகத் தெரிந்தே வேண்டுமென்றே தான் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்துள்ளது என்பது வேறு விஷயம்) ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? உலகின் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு தலைவரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட அப்பத்திரிக்கையை தடை செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கண்டித்திருக்கவாவது வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஆனவம் பிடித்த டென்மார்க் அரசு 'பத்திரிக்கையின் கருத்துச் சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது' என்று அகம்பாவத்துடன் அளித்த் பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்தது்.
சில மாதங்களுக்க முன் நடந்த இப்பிரச்சினையை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்தன. உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் டென்மார்க் அரசுக்குத் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன..வளைகுடா நாடுகள் டென்மார்க் நாட்டிலிருந்து இறக்குமதியை நிறுத்தின. முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனித்தனர். அதன் காரணமாக டென்மார்க் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.
மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கினர். இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இப்போது டென்மார்க்கின் சில பத்திரிக்கைள் மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளன. முதலில் நடந்தது, 'தெரியாமல் நடந்த தவறு' என ஒதுக்கிவிடலாம். ஆனால் இப்போது மறுபடியம் அதே தவறு நடந்திருப்பதைப் பார்க்கும் போது இது திட்டமிட்டு வேண்டுமென்றே நடந்தள்ளது என்பது உறுதியாகின்றது. இதற்குக் காரணம், இவாகளின் கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கும் இஸ்லாத்தின் மீதும், உயரிய பண்பாட்டை உலகு்க்கு உணர்த்திய நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தான்.
இப்போது தீர்ப்பு முஸ்லிம்களாகிய நம் கையில். இனி இத்தகையவர்களுக்கு எதிரான நமது போராட்டம தொடங்கப்பட்வேண்டும்.. போராட்டம் என்பது வன்முறையற்ற, அதேசமயம் என்றென்றும் இத்தகைய அராஜக அரசுகளுக்கும் பத்திரிகைகளுக்கும் சரியான பாடமாக அமையும் விதத்தில் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில உலக முஸ்லிம்கள் அனைவரும் டென்மார்க் நாட்டின் அனைத்து தயாரிப்புகளையும் புறக்கணிக்க வேண்டும். வளைகுடா நாடுகளின் வியாபாரச் சந்தையில் பெருமளவில் டென்மார்க் நாட்டின் தயாரிப்புகள் விற்பனையில் உளளன.. அப்பொருட்களைக் கண்டறிந்து அவற்றை நாம் புறக்கனிக்க வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை நமது உயிரினும் மேலாக நாம் மதிக்கிறொம் என்பதை அகில உலகுக்கும் பறைசாற்றும் விதத்தில், நமது நபியை கேவலப்படுத்திய அந்நாட்டின் அனைத்து தயாரிப்புகளையும் அடியோடு புறக்கணித்து சரியான பாடம் புகட்ட வேண்டும். இப்புறக்கணிப்பை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வதோடு நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
நமது இந்த புறகக்ணிப்பு டென்மார்க் நாட்டுக்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தட்டும். அந்நாம்டின் ஒவ்வொரு குடிமகனும் தமது நாட்டின் பொருளாதார வீழ்சிக்குக் காரணமான தமது நாட்டின் திமிர் பிடித் பத்திரிக்கைகளும், அவற்றுக்காக வக்காலத்து வாங்கிய ஆட்சியாளர்களும் தான் என்பதை உணர்ந்து அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அசத்தியத்திற்கெதிரான புரட்சி வெடிக்கட்டும். அயோக்கியர்கள் பாடம் படிக்கட்டும்.
புறக்கணிக்கப்டவேண்டிய டென்மார்க் நாட்டின் தயாரிப்புகள் பற்றி விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்
தொடுப்பு திறக்கும்போது save செய்யவும்.


Mar 22, 2008

வலைத்தளங்கள்,வலைப்பதிவுகளை இஸ்லாமிய மயமாக்குவோம்

நீங்கள் சொந்தமாக வலைத்தளம் நடத்துகிறீர்களா? அல்லது வலைப்பதிவு தொடங்கி உங்கள் பதிவுகளைப் பதிக்கிறீர்களா? அப்படியானால் பயனுள்ள பல்வேறு இஸ்லாமிய தொடுப்புகளை உங்கள் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இணைத்தால் பலருக்கும் பயனாக இருக்கும். இதன் மூலம் உங்கள் தளங்கள் மற்றும் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அதிகமாவதுடன் இறைவேத வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் எல்லோருக்கும் எத்திவைத்த நன்மையும் கிடைக்கும்.
'இல்லாத பொருளே இல்லை
இணையில்லா குர்ஆன் இங்கே
சொல்லாத பொருளே இல்லை
சோபிதம் பாராய் நெஞ்சே!”
என்று கவிஞர் சிராஜ் பாக்கவி அழகாகச் சொல்வார். திருமறை குர்ஆனின் பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து உங்களுக்குத் தேவையானதை தேடவும், திருத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிப் பேழைகளில் மிகச்சிறந்த தொகுப்பாகிய புகாரியிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேடி எடுக்கவும், திருமறை குர்ஆனின் பல்வேறு கிராஅத்களைக் கேட்டு இன்புறவும், அவற்றை உங்கள் கைபேசி(செல்போன்)களில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், உலக அளவில் அனைத்து நாடுகள் மற்றும் நகரங்களின் தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளவும், அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களையும் பொருளுடன் அறிந்து கொள்ளவும், அவற்றை உங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், இப்படி இஸ்லாம் குறித்த பல்வேறு செய்திகளை உங்கள் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் வெளியிடவும் இங்கே கிளிக்குங்கள்.அவை அனைத்தும் முழூக்க முழுக்க இலவச சேவை என்பது இதன் சிறப்பம்சம்.இனி நமது வலைத் தளங்களையும் வலைப்பதிவுகளையும் இஸ்லாமிய மயமாக்குவோம்.

விருப்ப மொழியில் குர்ஆன்