Apr 24, 2010

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!


நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?


அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! 

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்

முன்னுரை 
அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.

நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதரர்களிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகெட்ட மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது.

எனவே மார்க்க அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள, இணைவைக்கும் சகோதரர்களுக்கு இந்த கட்டுரை உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திவனாக ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194) 

இந்த வசனத்தில் கூறப்பட்ட அறிவுரை என்ன?
  • அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக் கின்றீர்களோ

இங்கு அல்லாஹ்வையன்றி என்று கூறப்பட்டுள்ளது எனவே ஆற்றல்கள் அனைத்திற்கும் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று உணர வேண்டும. அடுத்து எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ என்று கூறப்பட்டுள்ளது இதன் மூலம் அல்லாஹ்வையன்றி எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது என்று உணர வேண்டும்.

  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

இங்கு அவர்களும் என்று கூறப்பட்டுள்ளது அவர்கள் என்றால் அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற அனைத்து படைப்பினங்களும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள் என்று அல்லாஹ்வின் படைப்பினங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம் அத்தனையும் இந்த அவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்கிவிடுகிறது.

இதன் அடிப்படையில் இணைவைக்கும் மக்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறார்களோ அவர்களும் இந்த அவர்கள் என்ற வட்டத்திற்குள் அடங்குகிறார்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் இணைவைப்பாளர்கள் அழைக்கும் அந்த அவர்களை அழைத்தால் எந்த பதிலும் கிடைக்காது என்று அல்லாஹ் கூறிவிட்டு கூடவே சவால் விடுகிறான்.

எனவே சகோதரர்களே இந்த அவர்கள் என்ற வட்டத்தில் அடங்கும் அல்லாஹ்வின் படைப்பினங்களை நீங்கள் வணங்குவதாக இருந்தால் மறுமையின் கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ்வின் சவாலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்!

Apr 8, 2010

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்‏

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்
நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !
அறிந்து கொள்க !
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை  கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி
மற்றொரு அறிவிப்பில்
அல்லாஹ்வின் கட்டளைகளைப்  பேணிக்கொள் !
அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !
உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !
உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.
அறிந்து கொள்க !
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.
உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.
அறிந்து கொள்க !
நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.
முந்தவும் செய்யாது...
மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம்  அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும்தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா
முடியாது !
காரணம் !
கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,
நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.
நீச்சலடிக்க முடிந்தாலும்
எத்தனை மணிநேரம் ?
எவ்வளவு தூரம்
எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?   
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.
பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அந்த சிறுமி உலகில் உயிர் வாழும் கால அளவு மீதமிருந்ததால் அவளை மட்டும் காப்பாற்றி கரை சேர்ப்பது இறைவனின் பொறுப்பில் உள்ளது என்பதால் அதிசயமாய் உயிர் பிழைத்த சிறுமி என்ற தலைப்பிட்டு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=1530:2009-07-02-05-34-49&catid=35:world-news&Itemid=61  http://www.meelparvai.net/index.php?view=article&catid=115%3A2009-02-12-05-17-06&id=719%3A2009-07-15-10-24-17&option=com_content&Itemid=322
உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.

Apr 4, 2010

உலகின் முஸ்லிம்கள் மக்கள் தொகை

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை
உலகிலுள்ள முஸ்லிம்கள் நாடுவாரியாக ஒரு புள்ளிவிவரத்தைக் கீழே காண்போம்      (நன்றி-அல்பாக்கவி.காம்)

நாடுகள் உலக முஸ்லிம் மக்கள் தொகை உலக மககள் மில்லியனில் உலக மக்களில் சதவிகிதம் உலக முஸ்லிம் சதவிகிதம்
ஆசியா பசிபிக் 972,537,000 972மில்லியன் 24.1 61.9
மத்தியக் கிழக்கு,வட ஆப்ரிக்கா 315,322,000 31மில்லியன் 91.2 20.1
சஹாரா,ஆப்ரிக்கா 240,632,000 24மில்லியன் 30.1 15.3
ஐரோப்பா 38,112,000 38மில்லியன் 05.2 02.4
அமெரிக்கா 4,596,000 4.5.5மில்லியன் 00.5 00.3
உலக நாடுகள் 1571,198,000 1571மில்லியன் 22.9 100
2009 புள்ளிவிவரப்படி உலக முஸ்லிம் மக்கள் தொகை

1823.48 மில்லியன்
ரஷிய நாடுகள் 61852000
6.மில்லியன்
சைனா 21667,000
21மில்லியன்
முஸ்லிமகள் அதிகம் வாழும் நாடுகள் (2009)
நாடுகள் முஸ்லிமகள் எண்ணிக்கை
01.இந்தேனேசியா 203 மில்லியன்
02.பாக்கிஸ்தான் 174 மில்லியன்
03.இந்தியா 161 மில்லியன்
04.பங்களாதேஷ் 145 மில்லியன்
05.எகிப்து 79 மில்லியன்
06.நைஜீரியா 78 மில்லியன்
07.ஈரான் 74 மில்லியன்
08.துருக்கி 74 மில்லியன்
09.அல்ஜீரியா 34 மில்லியன்
10.மொராக்கோ 32 மில்லியன்
11.இராக் 30 மில்லியன்
12.சூடான் 30 மில்லியன்
13.ஆப்கானிஸ்தான் 28 மில்லியன்
14.எத்தியோப்பியா 28 மில்லியன்
15.உஸ்பெகிஸ்தான் 26 மில்லியன்
16.சவூதி அரேபியா 25 மில்லியன்
17.எமன் 23 மில்லியன்
18.சைனா 22 மில்லியன்
19.சிரியா 20 மில்லியன்
20.ரஷ்யா 16 மில்லியன்
மொத்தம்   1302  மில்லியன் மக்கள்
ஐம்பது நாடுகளுக்கு மேல் முஸ்லிம்கள் அதிகம் வாழுகின்றனர்.
கிறித்தவர்-முஸ்லிம் மக்கள் தொகை ஒரு ஒப்பீடு.
1900 முதல் 2025 வரை கிறித்தவம் முஸ்லிம்
1900ல் உலக மக்கள் தொகை 26.9% 12.4%
1980ல் உலக மக்கள் தொகை 30% 16.5%
2000ல்உலக மக்கள் தொகை 29.9% 19.2%
2025ல்உலக மக்கள் தொகை  (PROJECTED) 25% 30%

Apr 1, 2010

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு

முஸ்லிம்களுக்கு பல்வேறு வகைகளிலும் பயன்படும் சாப்ட்வேர் ஒன்றை சகோதரர் வேலன் அவர்கள் தமது வலைப்பதிவில் வெளியிட்டுளள்ர்ர் அதை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்

விருப்ப மொழியில் குர்ஆன்