Aug 30, 2010

உம்ராச் செய்ய எளிய வழிகாட்டி


அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.


எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம்
அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை
  • எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
  • தவாஃப் செய்ய வேண்டும்.
  • ஸயீ செய்ய வேண்டும்.
  • மொட்டையடிக்க வேண்டும்.
  • பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை

இஹ்ராம் அணிவதற்கெனஎல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும், முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும்அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள்

  • திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
  • வேட்டையாடுவது.
  • உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
  • தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
  • முடி, நகம் வெட்டுவது.
  • கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...


பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை


கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹீ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக் கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும்.

தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹீவல்லாஹீஅஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன்


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾



ஸூரத்துல் இஃக்லாஸ்

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾


இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும் போது...



இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை ஓத வேண்டும்.

பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.


(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.


இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)
நன்றி-DUBAITNTJ

Aug 18, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த அமைப்பை உருவாக்கியது. ஆனால் பின்னர் தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு கொடியுடன் அரசியல் சார்ந்த விவகாரங்களிலும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது. நஜ்ஜாத் அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு தஃவா எனும் ஒரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.
பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயரில் புதிய அமைப்பு துவங்கியுள்ளனர்.
பல்வேறு அரபு நாடுகளில் தமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமதான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய நிதியுதவிகளை செய்து வருகின்றன.
தமிழகத்தில் இரத்தானம் செய்வதில் இரண்டு முறை முதல் இடம் பிடித்த முஸ்லிம் சமுதாய இயக்கம்![ஆதாரம் தேவை]

பொருளடக்கம்

[மறை]

[தொகு] அமைப்பின் கொள்கைள்

1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்

[தொகு] கல்வி சேவை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாணவர் அணி தமிழகம் முழுக்க கல்வி சேவையை செய்துவருகின்றது.  
தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அயராது உழைத்து கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ், தமிழக்த்தில் எந்த முஸ்லீம் அமைப்புகளும், கல்வி அறகட்டளைகளும் செய்திராத கல்வி சேவைகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை தமிழகத்தில் 154 இடங்களில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. TNTJ மாணவர் அணி செய்துவரும் பல்வேறு பணிகள்
கல்வி வளர்சி பணிகள். 
1. கல்வி கற்பதும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாங்குவதும் எளிதானதே, இதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றோம், மிக குறுகிய காலத்தில் தமிழகத்தில் 154 இடங்களில் 255 மேற்பட்ட கல்வி கருத்தரங்குகளை நடத்தி உள்ளோம், தமிழ முஸ்லீம்களுக்காக மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.
2. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்காலாம் ? என்று அனைத்து சமுதாய மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றோம்.
3 . ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் கல்வி வழிகாட்ட கண்காட்சிகளை நடத்தில் அதில் ஒவ்வொறு படிப்பிற்க்கும் தனி பிரிவுகள் அமைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுகின்றோம்.
4. நல்ல கல்லூரியில் சேர அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், அதற்க்காக தேர்வுக்கு முன்னர் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை நடத்தி தேர்வு எழுதும் நுணுக்கங்களை மாணவ மாணவியருக்கு கற்று கொடுக்கின்றோம்.
5. வேலை வாய்ப்பு பெற ஆங்கில மொழித்திறமை அவசியம், அதற்க்காக ஆங்கில பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகின்றோம்.
6. ஏழை மாணவர்களுக்கும் கணினி அறிவை மேம்படுத்த இலவசமாக கம்ப்யூட்டர் சாப்ட் வேர் ஹார்ட்வேர் வகுப்புகள் நடத்தி வருகின்றோம்.
7. கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரங்களிலும், பொது கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
8. சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்பு தகவல் அறிந்து கொள்ள உள்நாடு வெளிநாட்டில் வேலை உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி அனைவருக்கும் e-mail மூலமாக தெரிவிக்கின்றோம். (நீங்களும் வேலை வாய்ப்பு தகவல் பெற tntjjob@gmail.com என்ற e-mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்).
9. வேலைவாய்ப்பு பெற நடைபெறும் நேர்முக தேர்வில் எவ்வாறு பதில் என்று மாணவர்களுக்கு " நேர்முக தேர்வு பயிற்சி முகாம்" நடத்திவருகின்றோம்.
10. உயர் கல்வி நிறுவனக்கள் உயர்சாதியினருக்கே என்ற நிலைமையை மாற்றி IIT, IIM, IISc, NIT, AIMS போன்ற உயர் கல்வி நிறுவங்கள் நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய தகவல்களை திரட்டி முஸ்லீம்களும் உயர் கல்வி நிறுவங்களில் படிப்பதற்க்கான ஊக்கமும், வழிகாட்டுதலும், பயிற்சியும் இலவசமாக அளித்து வருகின்றோம்.
11. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும், மாணவ மாணவியரின் கல்வி மேன்பாட்டில் பெற்றோர்களின் பெரும் பங்கை விளக்கி பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.
12. மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி தொகையை முஸ்லீம் மாணவ மாணவியருக்கு பெற்று கொடுக்கும் வகையில் அரசிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம்.
13. ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வண்ணமாக இலவச நோட்டு புத்தகமும், எங்களால் இயன்ற கல்வி உதவியும் செய்து வருகின்றோம்
சமுதாய பணிகள்
1. முஸ்லீம்களுக்கு எதிரான பத்திரிக்கைதுறை பயங்கரவாதத்தை தடுக்க நமது சமுதாய மாணவர்களும் பத்திரிக்கை துறையில் நுழைந்து சாதனை புறிய முஸ்லீம் மாணவர்க்ளுக்கு பத்திரிக்கை துறை சம்மத்தமாக பயிற்சி அளித்து வருகின்றோம்.
2. சமுதாய இளைஞர்களிடையே உள்ள வரதட்சணை மோகத்திற்க்கு எதிராக இளைஞர்களிடம் வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை விளக்கி வரதட்சணைக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்து வருகின்றோம்
3. இளைஞர்கள் மது, சிகெரெட் போன்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையாகமல் தடுக்க மாணவர்களிடம் மது சிகெரெட் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய்மைகளை விளக்கி போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
4. நமது சமுதாய மாணவியர்களை காதல் என்ற போர்வையில் காவி கயவர்களிடம் சிக்காமல் தடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம். காதல் என்ற பெயரில் நடக்கும் சமூக சீர்கேட்டிற்க்கு எதிராகவும் காதலர் தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு எதிராகவும், காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றோம்.
இஸ்லாமிய பணிகள்
1. முஸ்லீம்களின் இளைய சமுதாயம் ஷிர்க் பித்-அத் கொள்கையில் வீழ்ந்துவிடாமல் தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ பிரசாரங்களை மேற்கொண்டுள்ளோம், தனி நபர் தாவா மூலமும், துண்டு பிரசூரங்கள் மூலமும் ஏகத்துவ அழைப்பு பணியை இளைஞர்கள் மத்தியில் முடுக்கிவிட்டுள்ளோம்.
2. மாணவர்கள் இஸ்லாத்தை முழுவதும்மாக அறிந்த்து கொள்ள ஒழுக்க பயிற்ச்சி முகாம் (தர்பியா) நடத்தி வருகின்றோம்.
3. மாற்று மத மாணவர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை போக்கி இஸ்லாத்தின் பால் அவர்களை அழைக்கும் வண்ணம் "மாற்று மத மாணவர்களுக்கான கேள்வி-பதில்" நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்
4. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை கொண்டு முஸ்லீம் மாணவர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.
5. கல்லூரிகளில் ஜும்மா பயான் நிகழ்த்துவது, மாணவர் விடுதிகளில் (Hostels) இஸ்லாமிய பயான்கள் நிகழ்த்துவது போன்ற தாவா பணிகளை செய்து வருகின்றோம்.
6 . SMS மூலம் கல்வி செய்திகள் குர் ஆன் ஹதீஸ்கள் பரப்பி வருகின்றோம்
 இணையதள பணிகள்  
இணையதளத்தில் கல்வி வளர்ச்சி பணிகளையும் இஸ்லாமிய பணிகளையும் ஆற்ற www.tntjsw.blogspot.com என்ற இணையத்தை (வலை பூ) நிறுவி உள்ளோம். இதில் கல்வி பற்றிய தகவல்கள், குர் ஆன் ஹதீஸ்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம்.

[தொகு] அமைப்பின் நோக்கங்கள்

1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.
2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.
3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.

அமைப்பின் செயல் திட்டங்கள்:

1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.
2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.
5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.
7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.
8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.
9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.
10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.
12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.
15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.
16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.

[தொகு] தப்லீக் ஜமாத்துடன் உள்ள பொதுவான பிணக்குகள்

[தொகு] தமுமுகவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் பிணக்குகள்

[தொகு] வெளியிணைப்புகள்

Jul 25, 2010

TNTJ திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் A.சாதிக் தீவுத்திடல் உரை

Jul 4, 2010

தீவுத்திடல் மாநாடு நேரலை

இறைவனின் பேரருளால் இன்று 04-07-2010 நடை பெறஉள்ள மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாக இணையத்தில் காண கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்
http://www.tntj.net/july-live/






Jul 3, 2010

tntj July-4 Misra








Jun 24, 2010

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள்

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் சென்னை நகரில் குற்றங்களை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் சேகர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள்.


தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள கமிஷனர் சேகரின் அறிவுரைப்படி, 12 ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர்.

போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள் 
1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.

2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்’ பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.

3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளிïர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.

4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.

7. முதியவர்கள் : வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

9. ஜோதிடர்கள் : ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.

10. டெலிபோன் எண்கள் : அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

11. ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.

12. இதேபோல, போலீசார் சமுதாயத்தில் நடக்கும் மற்ற குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உள்ளனர்
                  நன்றி-மேலப்பாளையம் பதிவுகள்

Apr 24, 2010

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!


நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?


அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! 

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்

முன்னுரை 
அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.

நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதரர்களிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகெட்ட மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது.

எனவே மார்க்க அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள, இணைவைக்கும் சகோதரர்களுக்கு இந்த கட்டுரை உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திவனாக ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன் 7:194) 

இந்த வசனத்தில் கூறப்பட்ட அறிவுரை என்ன?
  • அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக் கின்றீர்களோ

இங்கு அல்லாஹ்வையன்றி என்று கூறப்பட்டுள்ளது எனவே ஆற்றல்கள் அனைத்திற்கும் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று உணர வேண்டும. அடுத்து எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ என்று கூறப்பட்டுள்ளது இதன் மூலம் அல்லாஹ்வையன்றி எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது என்று உணர வேண்டும்.

  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!

இங்கு அவர்களும் என்று கூறப்பட்டுள்ளது அவர்கள் என்றால் அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற அனைத்து படைப்பினங்களும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள் என்று அல்லாஹ்வின் படைப்பினங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம் அத்தனையும் இந்த அவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்கிவிடுகிறது.

இதன் அடிப்படையில் இணைவைக்கும் மக்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறார்களோ அவர்களும் இந்த அவர்கள் என்ற வட்டத்திற்குள் அடங்குகிறார்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் இணைவைப்பாளர்கள் அழைக்கும் அந்த அவர்களை அழைத்தால் எந்த பதிலும் கிடைக்காது என்று அல்லாஹ் கூறிவிட்டு கூடவே சவால் விடுகிறான்.

எனவே சகோதரர்களே இந்த அவர்கள் என்ற வட்டத்தில் அடங்கும் அல்லாஹ்வின் படைப்பினங்களை நீங்கள் வணங்குவதாக இருந்தால் மறுமையின் கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ்வின் சவாலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்!

Apr 8, 2010

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்‏

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்
நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !
அறிந்து கொள்க !
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை  கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி
மற்றொரு அறிவிப்பில்
அல்லாஹ்வின் கட்டளைகளைப்  பேணிக்கொள் !
அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !
உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !
உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.
அறிந்து கொள்க !
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.
உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.
அறிந்து கொள்க !
நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.
முந்தவும் செய்யாது...
மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம்  அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும்தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா
முடியாது !
காரணம் !
கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,
நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.
நீச்சலடிக்க முடிந்தாலும்
எத்தனை மணிநேரம் ?
எவ்வளவு தூரம்
எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?   
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.
பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அந்த சிறுமி உலகில் உயிர் வாழும் கால அளவு மீதமிருந்ததால் அவளை மட்டும் காப்பாற்றி கரை சேர்ப்பது இறைவனின் பொறுப்பில் உள்ளது என்பதால் அதிசயமாய் உயிர் பிழைத்த சிறுமி என்ற தலைப்பிட்டு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=1530:2009-07-02-05-34-49&catid=35:world-news&Itemid=61  http://www.meelparvai.net/index.php?view=article&catid=115%3A2009-02-12-05-17-06&id=719%3A2009-07-15-10-24-17&option=com_content&Itemid=322
உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.

Apr 4, 2010

உலகின் முஸ்லிம்கள் மக்கள் தொகை

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை
உலகிலுள்ள முஸ்லிம்கள் நாடுவாரியாக ஒரு புள்ளிவிவரத்தைக் கீழே காண்போம்      (நன்றி-அல்பாக்கவி.காம்)

நாடுகள் உலக முஸ்லிம் மக்கள் தொகை உலக மககள் மில்லியனில் உலக மக்களில் சதவிகிதம் உலக முஸ்லிம் சதவிகிதம்
ஆசியா பசிபிக் 972,537,000 972மில்லியன் 24.1 61.9
மத்தியக் கிழக்கு,வட ஆப்ரிக்கா 315,322,000 31மில்லியன் 91.2 20.1
சஹாரா,ஆப்ரிக்கா 240,632,000 24மில்லியன் 30.1 15.3
ஐரோப்பா 38,112,000 38மில்லியன் 05.2 02.4
அமெரிக்கா 4,596,000 4.5.5மில்லியன் 00.5 00.3
உலக நாடுகள் 1571,198,000 1571மில்லியன் 22.9 100
2009 புள்ளிவிவரப்படி உலக முஸ்லிம் மக்கள் தொகை

1823.48 மில்லியன்
ரஷிய நாடுகள் 61852000
6.மில்லியன்
சைனா 21667,000
21மில்லியன்
முஸ்லிமகள் அதிகம் வாழும் நாடுகள் (2009)
நாடுகள் முஸ்லிமகள் எண்ணிக்கை
01.இந்தேனேசியா 203 மில்லியன்
02.பாக்கிஸ்தான் 174 மில்லியன்
03.இந்தியா 161 மில்லியன்
04.பங்களாதேஷ் 145 மில்லியன்
05.எகிப்து 79 மில்லியன்
06.நைஜீரியா 78 மில்லியன்
07.ஈரான் 74 மில்லியன்
08.துருக்கி 74 மில்லியன்
09.அல்ஜீரியா 34 மில்லியன்
10.மொராக்கோ 32 மில்லியன்
11.இராக் 30 மில்லியன்
12.சூடான் 30 மில்லியன்
13.ஆப்கானிஸ்தான் 28 மில்லியன்
14.எத்தியோப்பியா 28 மில்லியன்
15.உஸ்பெகிஸ்தான் 26 மில்லியன்
16.சவூதி அரேபியா 25 மில்லியன்
17.எமன் 23 மில்லியன்
18.சைனா 22 மில்லியன்
19.சிரியா 20 மில்லியன்
20.ரஷ்யா 16 மில்லியன்
மொத்தம்   1302  மில்லியன் மக்கள்
ஐம்பது நாடுகளுக்கு மேல் முஸ்லிம்கள் அதிகம் வாழுகின்றனர்.
கிறித்தவர்-முஸ்லிம் மக்கள் தொகை ஒரு ஒப்பீடு.
1900 முதல் 2025 வரை கிறித்தவம் முஸ்லிம்
1900ல் உலக மக்கள் தொகை 26.9% 12.4%
1980ல் உலக மக்கள் தொகை 30% 16.5%
2000ல்உலக மக்கள் தொகை 29.9% 19.2%
2025ல்உலக மக்கள் தொகை  (PROJECTED) 25% 30%

Apr 1, 2010

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு

முஸ்லிம்களுக்கு பல்வேறு வகைகளிலும் பயன்படும் சாப்ட்வேர் ஒன்றை சகோதரர் வேலன் அவர்கள் தமது வலைப்பதிவில் வெளியிட்டுளள்ர்ர் அதை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்

Mar 27, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


நம்மில் பலரும் இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்க்கெதிரான பதிவுகளை எதிர்க்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றிவருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவு எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவிபுரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

Mar 22, 2010

பெரியார் தாசன் இப்போது இறைதாசனாக







ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 155
இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்! 6:155.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இறை மறுப்பு போலி என்பதற்கும்,
இறைநம்பிக்கையே உறுதி என்பதற்கும்,
நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார் தாசனாய் இருந்து இன்று இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட படித்த பண்பாளர் சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும் வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின் பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன், அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece

இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து  மத வேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன் மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள் திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context)    ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். தினமனி ரம்ஜான் மலர் 2003.

உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள் திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர் முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும், 14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம் என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 பக்கம் 33.

4:82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி வந்துள்ளனர்.

இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல் அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின் பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர் கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/


மறுமை
உயிரில்லாத ஒன்றிலிருந்து (களி மண்ணிலிருந்து) படைக்கப்பட்ட முதல் மனிதரின் உயிர் அணுக்களிலிருந்து உலகம் முழுவதும் மனித இனத்தை பரவச்செய்த இறைவனுக்கு அவர்கள் மொத்தமாக மரணித்தப் பின்னர் ஒன்றுக் கூட்டி எழுப்புவது கடினமானதல்ல என்பதை சிந்தித்தால் போலியான இறைமறுப்பிலிருந்து விடுபட்டு உறுதியான இறைநம்பிக்கையின் பால் மாறி விடலாம்.

Ø  77. மனிதனை விந்திரிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.
Ø  78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
Ø  79. ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
Ø  80. அவன் பசுமையான மரத்திரிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிரிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
Ø  81. வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
Ø  82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.
Ø 83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! அத்தியாயம்-36


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃ பாரூக்

விருப்ப மொழியில் குர்ஆன்